Sunday, July 12, 2009

க....க....க.....கல்லூரி சாலை

1999ல நாங்க காலேஜ் சேர்ந்த புதுசு.

நீலகிரி மாவட்டத்துல உள்ள ஒரு காலேஜ்லதான் சேர்ந்திருந்தேன். மொத நாளு ஹாஸ்டல்ல ராகிங் கல கட்டிகிட்டிருந்துச்சு. ஒரு சீனியரு என்கிட்ட வந்து உன் பேர் என்னன்னு கேட்டாரு. நான் பேர சொன்னேன் (Initial இல்லாம). உடனே அவரு ரோஜா படத்துக்கு மியூசிக் போட்டது யாருன்னு யாருன்னு கேட்டாரு. நானும் நம்மளோட I.Q வ test பண்ணுறாங்க போலருக்குன்னு நெனச்சுக்கிட்டே A.R.ரஹ்மான் அப்படின்னு சொன்னேன். உடனே அவரு கேட்டாரு A.R.ரஹ்மானோட அப்பாவுக்கெல்லாம் மரியாதை கொடுக்கிறே. உங்க அப்பாவுக்கு மரியாதை கொடுக்கமாட்டியான்னு. (எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க)

அப்புறமா கொஞ்ச நாளு கழிச்சு, நமக்கும் ஃபிரண்ட்ஸெல்லாம் செட்டான பிறகு ஒரு நாளு வெள்ளிகெழம சாயங்காலமா அரட்டை அடித்துகொண்டிருக்கும்போது, தண்ணி அடிப்பதை பற்றி பேச்சு வந்தது. எல்லாரும் சொல்லிக்கிட்டிருக்காய்ங்க, நான் ஆஃப் அடிப்பேன், குவாட்டர் அடிப்பேன் அப்படின்னு. ஒருத்தன் என்கிட்ட கேட்டான் நீ சரக்கு அடிப்பியான்னு. நான் கேட்டேன் சரக்குன்னா என்னன்னு. எல்லாரும் என்னையையே பச்சை புள்ளய பார்க்குற மாதிரி பாவமா பாக்குறாய்ங்க. சே, உண்மையை சொல்லியிருக்கலாமோன்னு கூட யோசிச்சேன். சரி என்னதான் நடக்குதுன்னு பார்க்கலாமுன்னு ஓரமா உட்கார்ந்திருந்தேன். என்னய ஒரு பொருட்டாவே மதிக்காம சனிக்கெழம சரக்கடிக்கலாமுன்னு பேசி முடிவே எடுத்துட்டானுங்க.

சனிக்கெழம ராத்திரி ஏழு மணிக்கு (நீலகிரியில ஆறு மணிக்கு மேலே ராத்திரிதான்) சனி புடிக்கபோறது தெரியாம எட்டு பேரு கெளம்பிட்டாங்க. போற போக்குல ஒருத்தன் என்னைய கூப்பிட்டான், வாடா கத்து தாரேண்ணு. அப்பையும் நான் அமைதியா இருந்தேன். என்னோட ஊர்க்காரனும் அவனுங்க கூட கெளம்புறான். அவன்கிட்டபோய் 'டேய் நாம ஃபர்ஸ்ட் இயர் சேர்ந்து மூணு மாசம் கூட முழுசா முடியல. ஏன்டா ரிஸ்க் எடுக்கிற' ன்னு கேட்டேன். அதுக்கு அந்த கூட்டத்திலே ஒருத்தன் 'நீதான் சரக்குன்னா என்னன்னு கேட்ட. ஏன்டா வர்ரவனையும் கெடுக்கிற' ன்னு கேட்டான். நல்லபடியா போயிட்டு பத்திரமா வாங்கடான்னு அவனுங்கள அனுப்பி வைச்சுட்டு, ரூமுக்கு போயி படுத்தாச்சு.

ஒரு ஒம்போது மணிக்கு ஹாஸ்டல்ல ஒரே சத்தம். போயி பாத்தா எட்டு பேருல நாலு பேரு ஹால்லய படுத்து கெடக்குறாங்க. ரெண்டு பேர காணும். ஒருத்தன் ரூம்ல போயி படுத்துட்டான். எங்க ஊர்க்காரன் மட்டும் திரு திருன்னு முழிச்சுக்கிட்டே நிக்குறான். என்னடா ஆச்சுன்னு கேட்டா ஒயின்ஸ் ஷாப்புலயே பிரச்சனைய ஆரம்பிச்சுடாய்ங்க. ரெண்டு பேரு படி ஏற முடியாம கீழேயே உட்கார்ந்திருக்காங்கன்னு சொன்னான். அப்படி என்னத்தடா குடிச்சீங்கன்னா, இதோ பாரு, இதிலே இருந்ததெல்லாம் குடிச்சாச்சு. இதுதான் மீதின்னு ஃஹாப் பாட்டில (MC) எடுத்து காமிச்சான். அதுல குவாட்டருக்கும் கொஞ்சம் கீழே சரக்கு இருந்திச்சு. அடப்பாவிகளான்னு சரக்க வாங்கி பத்திரமா வைச்சிட்டு கீழ இருந்தவனுங்களை பத்திரமா ரூமுக்குள்ள சேர்த்திட்டு நானும் போயி மிச்சமிருந்த சரக்க பாட்டிலிலேய தண்ணிய மிக்ஸ் குடிச்சுட்டு போயி படுத்தாச்சு.

ஞாயிற்றுகெழம காலையிலேயே ஹாஸ்டலுக்கு பிரின்ஸிபால் வந்துட்டாரு. யார் யாரு சரக்கடிச்சதுன்னு கேட்டு லிஸ்ட் ரெடி பண்ணி எட்டு பேரோட வீட்டுக்கும் தந்தி அடிச்சுட்டாங்க. பேரண்ட்ஸை உடனே வரச்சொல்லி.

எங்க ஊருக்கும் தந்தி போயி என்னோட அப்பாவும், எங்க ஊர்க்கார பையனோட அப்பாவும் புதன்கிழமை அன்னைக்கு வந்துட்டாங்க. நான் எங்க அப்பாட்ட போயி நீங்க ஏன் வந்தீங்கன்னா, அவரு கேட்டாரு, அப்ப நீ மாட்டிக்கலயான்னு? (பையன் மேல எவ்வளவு நம்பிக்கை).

மாட்டின எட்டு பேரையும் ஒரு வாரம் சஸ்பெண்ட் பண்ணுணாங்க. காலேஜிக்கும் விஜயதசமிக்காக ஒரு வாரம் லீவு விட்டுட்டாங்க.

--------------------------------------------------------------------------------
இதனால் அறியப்படும் நீதி: பெற்றோரை ஏமாற்றாதீர்கள்
---------------------------------------------------------------------------------

2 comments:

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ரொம்ப நல்லவராயிருக்கீங்க