Sunday, August 30, 2009

ஓட்டு போட்ட மக்களே இப்போ சந்தோஷம்தானே

போட்டோவ சந்தோஷமா பாருங்க. நல்லா என்ஜாய் பண்ணுங்க.











Saturday, August 22, 2009

நீங்க தமிழர்ன்னா இதைப் படிக்காதீங்க

நீங்க தமிழர்ன்னா இதைப் படிக்காதீங்க.

-----------------------------------------------------------
சுவாமி குடிகாரானந்தாவின் உளறல்கள்
-----------------------------------------------------------

தமிழன் என்றொரு இனமுண்டு
தனியே அவனுக்கோர் குணமுண்டு
விலைக்கு வாங்க மனமுண்டு
வாங்கும் அளவுக்கு பணமுண்டு
எதிர்த்து கேட்டால் உதையுண்டு
மீறினால் போவான் கொலையுண்டு.

இப்படிக்கு,

தமிழனை வேரறுக்கப்போவோர் சங்கம்.

தலைமையிடம்: போபாலபுரம், சென்னை.

செயலகம்: கோயஸ் தோட்டம், சென்னை.

முக்கிய அறிவிப்பு: எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை. போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்.

Tuesday, August 18, 2009

துபாயில் இடிந்து விழுந்த ஆறு மாடி கட்டிடம் - படங்கள்



















































Saturday, August 15, 2009

அலமேலுவுக்கு அஞ்சு புள்ள பொறந்தது எப்படி??

இது ஒரு உண்மை அனுபவம்.


'புள்ள பொறக்குறது மேலே இருக்குறவன் கொடுக்கிற வரம்' அப்படின்னு துபாயின் பெரும்பான்மை இனமான MM (மானாட மயிலாட இல்லை. Maலையாள Muஸ்லீம்)ங்கள் ரொம்ப நாளா சொல்லிக்கிட்டே இருக்காங்க. இது எந்த அளவுக்கு உண்மைன்னு தெரிஞ்சுக்கறதுக்கு ஒரு சின்ன(!) அனுபவம்.

ஒரு மூணு வருஷத்துக்கு முன்னால ஒரு கம்பெனியில வேலை பார்த்துக்கிட்டிருந்தேன். அப்போ மேற்படி இனத்தை சேர்ந்த நண்பர் ஒருத்தர் இருந்தாரு. ரொம்ப நல்லா பழகுவாரு. தங்கமான குணம். கல்யாணம் ஆகி அஞ்சு வருஷத்துல நாலு குழந்தைகள். ரொம்ப சந்தோஷமான குடும்பம். நார்மலான சம்பளம். கரெக்டா ஊருக்கு பணம் அனுப்பிடுவாரு. (அப்போதைக்கு Exchange Rate 1திர்ஹாமுக்கு 10ரூபாய் 70பைசா). நாலாவது குழந்தை பிறந்ததற்குப்பிறகு ரெண்டு மாச லீவுல ஊருக்கு போனாரு.

லீவு முடிஞ்சு திரும்பி வந்து இரண்டு வாரத்துக்கு பிறகு எல்லாத்துக்கும் ஸ்வீட் கொடுத்துக்கிட்டு இருந்தாரு. ஏன்னு கேட்டா மனைவி முழுகாம இருக்காங்கன்னு சொன்னாரு. கம்பெனியில அவர கிண்டல் பண்ணாத ஆளே கிடையாது. லீவுக்கு போனா வேற வேலையே இல்லையான்னு கலாய்ச்சுகிட்டு இருந்தாங்க. அவரு அமைதியா சொன்னாரு 'எல்லாம் மேலே இருக்கிறவன் கொடுக்கிறான். நம்ம என்ன பண்ணுறது'ன்னு. எல்லாம் முடிஞ்சு நானும் வேற கம்பெனி மாறியாச்சு.

சமீபத்துல ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஒரு சூப்பர் மார்க்கெட்டுல அவரை சந்திச்சேன். ஆளே ரொம்ப மாறி போயி 'ஓ'ன்னு இருந்தாரு. 'என்னண்ணே இப்படி ஆயிட்டீங்க'ன்னு கேட்டதுக்கு, 'என்ன தம்பி பண்ணுறது. குடும்பம் பெரிசா போச்சு. ரொம்ப கஷ்டமாயிருக்கு' அப்படின்னு சொன்னாரு.

காரணம் இதுதான். அவருக்கு மொத்தம் ஆறு குழந்தைகள். சம்பளம் கொஞ்சமாதான் ஏறியிருக்கு. (ஆனா இப்போதைய Exchange Rate 1திர்ஹாமுக்கு 13ரூபாய்). இருந்தாலும் பேமிலிய மெயின்டெயின் பண்ண முடியாத அளவுக்கு செலவுகள். ஏகப்பட்ட கடன் (துபாயிலும், நாட்டிலும்). ரொம்ப ஒடிஞ்சு போயி எல்லாத்தையும் சொன்னாரு. நானும் என்னோட மொபைல் நம்பர கொடுத்து ஏதாவது ஹெல்ப் வேணும்னா போன் பண்ண சொல்லிட்டு வந்துட்டேன்.

நேத்து போன் பண்ணியிருந்தாரு. 'தம்பி இப்போ வேலை பாக்குற கம்பெனியில என்னை வேலைய விட்டு தூக்குற மாதிரி பேசிக்கிட்டு இருக்காங்க'ன்னு சொல்லிக்கிட்டிருக்கும் போது போன் கட்டாயிருச்சு. திரும்ப போன் பண்ணி பேசும்போது ரொம்ப புலம்பினாரு. 'அப்போ எல்லாரும் கிண்டல் பண்ணும்போது எனக்கு ஒன்னுமே பெரிசா தெரியல. இப்போதான் எல்லாம் புரியுது. எல்லாத்தையும் மேல இருக்குறவன் பாத்துக்க மாட்டான். நாமளும் வாழ்க்கைய புரிஞ்சு நடந்துக்கணும்' அப்படின்னு எனக்கு அட்வைஸ் வேற பண்ணுனாரு. நல்ல வேளை கிரெடிட் கார்டு எதுவும் இல்லை.

இன்னைக்கு காலையில ஏர்போர்ட்ல இருந்து போன் பண்ணி 'என்ன கேன்ஸல் பண்ணிட்டாங்க. ஏர்போர்ட்ல இருக்கேன்' அப்படின்னு சொன்னாரு. 'இன்னைக்கு லேபர் ஆபிஸ் லீவாச்சே. எப்படி கேன்ஸல் பண்ண முடியும்'ன்னு கேட்டதுக்கு 'அதெல்லாம் முந்தா நேத்தே எல்லாத்தையும் முடிச்சுட்டாங்க. எனக்கு இப்போதான் தெரியும்'ன்னு சொன்னாரு. ரொம்ப வருத்தத்தோட இன்னொரு பிரண்டுக்கு போன் பண்ணி சொன்னேன்.

அவரு சொன்னதை கேட்டு திகைச்சு போயிட்டேன். அவரோட மனைவி எட்டாவது பிரசவத்துக்காக ஹாஸ்பிட்டல்ல இருக்காங்க.(ஒரு குழந்தை இறந்து போயிடுச்சாம்). பிரசவம் பிரச்சனையா இருக்குமுன்னு டாக்டர் சொல்லியிருக்காங்க. அதுக்கு பணம் ரெடி பண்ண வழி தெரியாம கம்பெனி மெட்டீரியல்ல கைய வச்சுட்டாரு. அதனாலதான் வேலைய விட்டு தூக்கிட்டாங்கன்னாரு. என்னால அதுக்கு மேல எதுவும் சோல்ல முடியாம போனை வச்சுட்டேன்.

வளர்ந்த நாட்டுல இருக்கறவங்களே அதிக குழந்தை அதிக செலவுன்னு ஒன்னு ரெண்டோட நிறுத்தும் போது நமக்கு ஏன் இத்தனை?. யோசிப்போம்.

சிறு குடும்பம் சீரான வாழ்வு.
பெரிய குடும்பம் பேராபத்து.

------------------

தலைப்பு : கடைசியா டைப் பண்ணுனதுனால என்ன வைக்கிறதுன்னு தெரியல.

-----------------

Thursday, August 6, 2009

வாழைப்பழ காமெடி - ஓர் அனுபவம்

இது நான் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்தபோது நடந்தது.

ஒருநாள் தமிழாசிரியர் பாடம் நடத்தி்க்கொண்டிருக்கும்போது ஒரு மாணவனை எழுப்பி அவர் சொல்வதை திருப்பிச் சொல்ல சொன்னார்.

ஆசி: தம்பி, எழுந்திரு. நான் சொல்வதை திரும்பச்சொல்.

மாண1: சரி அய்யா.

ஆசி: வாழைப்பழம் நழுவி பாலில் விழுந்தது. சொல்லுப்பா.

மாண1: வாளப்பளம் நளுவி பாழில் விளுந்தது.

ஆசி: கிழிஞ்சுது போ. அப்படி இல்லப்பா. வாழைப்பழம். சொல்லு.

மாண1: வாளைப்பளம்.

ஆசி: நாக்கை நல்லா மடக்கணும். சரியா.

மாண1: சரி அய்யா.

ஆசி: இப்ப சொல்லு.

மாண1: வாழைப்பழம்.

ஆசி: நன்று. முழுவதுமாக சொல்.

மாண1: வாழைப்பழம் நழுவி பாழில் விழுந்தது.

ஆசி: தம்பி. பாழில் இல்ல. பாலில். நாக்கை கொஞ்சமாக மடக்கினால் போதும்.
சொல்லு.

மாண1: வாழைப்பழம் நழுவி பாலில் விழுந்தது.

ஆசி: மிகவும் சரி. (மற்றொரு மாணவனை நோக்கி) தம்பி நீ சொல்லு.

மாண2: வாயப்பயம் நயுவி பாயில் வியுந்தது.

ஆசி: (திகைப்புடன்) மறுபடியும் சொல்லு.

மாண2: வாயப்பயம் நயுவி பாயில் வியுந்தது.

ஆசி: வாழ்வதற்கு எல்லாம் பயப்பட கூடாது. அது வாயப்பயம் இல்லை.
வாழைப்பழம். சொல்லு.

மாண2: வாயைப்பயம்.

ஆசி: தம்பி 'ய' இல்லப்பா. 'ழ'.

மாண2: ய

ஆசி: தம்பி நாக்க நல்லா மடிச்சு சொல்லு. 'யா'. (மாணவர்கள் சிரிக்கிறார்கள்).

ஆசி: (தவறை உணர்ந்து) ச்சே.ச்சே 'ழா'. சொல்லு.

மாண2: யா

ஆசி: தம்பி நாளைக்கு வரும் போது அப்பாவ கூட்டிக்கிட்டு வா. சரியா.

மாண2: சரி அய்யா.


மறுநாள் மாணவனின் தந்தையிடம்,

மா.த: வணக்கம் சார். வரசொன்னியலாம்ல.

ஆசி: வணக்கம். உங்க பையனுக்கு 'பழம்'ன்னு சொல்லவே தெரியவில்லை.
அதைச்சொல்லத்தான் வரச்சொன்னேன்.

மா.த: ஆமாஞ்சார். நானும் பாத்திருக்கேன். "அவன 'பயம் பயம்'ன்னு சொல்லச்சொன்னா, பயபுள்ள 'பயம் பயம்'ன்னுதான் சொல்றான ஒயிய 'பயம் பயம்'ன்னு சொல்லவே மாட்டங்குறான்".

அதிலிருந்து அந்த ஆசிரியர் அந்த வகுப்புக்கு வரவே இல்லை.
அந்த மாணவனின் பட்டபெயர் 'பயம்' என்று ஆனது.

-----------------------------------------------------------------------------------
தங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
நன்றி.
------------------------------------------------------------------------------------