Wednesday, July 15, 2009

இதழோடு இதழாக - பாகம் 3

தொடர்கதையின் முதல் பாகம்



தொடர்கதையின் இரண்டாம் பாகம்





தொடர்கிறது...............

------------------------------------------------------------------

பிளாஷ் பேக் : ஒன்பது வருடங்களுக்கு முன்னர்

------------------------------------------------------------------

காட்சி : 3

இடம்: ஒரு பொறியியல் கல்லூரி IT பிரிவின் முதலாமாண்டு வகுப்பறை

பங்கேற்பாளர்கள் : மதியழகன், ராதா கிருட்டிணன், அன்பு, ராணி, அனிதா, கல்லூரி முதல்வர் மற்றும் அறிமுகம் தேவையில்லாத மாணவர்கள்



முதலாமாண்டு மாணவர்களுக்கான முதல் நாள் வகுப்பு தொடங்கும் நாள்



மாணவர்கள் அறிமுகமில்லாததால் தனி தனியே அமர்ந்திருக்கின்றனர்.



--------------------------

ஒரு சிறு அறிமுகம்



ராதாவும், அன்புவும் சிறு வயதிலிருந்தே ஒன்றாக படித்தவர்கள். ராதாவுடைய அப்பா மிகப்பெரிய பல்கலை கழகத்தில் தமிழ் பேராசிரியர் மற்றும் ஆராய்ச்சியாளர். அன்புவின் அப்பா காவல்துறையில் ஜெயிலராக உள்ளார். அன்புவும், அவனது அப்பாவும் நெருங்கிய நண்பர்கள். ஏனெனில் அன்புவின் அம்மா அவனது சிறு வயதிலேயே மறைந்துவிட்டார்.



மதி சிறு வயதிலேயே தாய் தந்தையை ஒரு விபத்தில் பலி கொடுத்தவன். அவன் தந்தை ஒரு சிறு வியாபாரி. மதியின் பாட்டி அவனை ஆறு வயது வரை வளர்த்தார். பாட்டி இறக்கும் தருவாயில் அவனை ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்துவிட்டுவிட்டார். ஆறு வயது முதல் பாதிரியார் ஜோசப்பால் வளர்க்கப்பட்டான். நல்ல புத்திசாலி. +2 வில் மாவட்டத்தில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றவன்.



அனிதா, அழகான புத்திசாலிப்பெண். அழகிலும் அந்தஸ்திலும் சிறிது கர்வம் கொண்டவள். அவளது தந்தை அந்த கல்லூரி இயக்குனர்களில் ஒருவர். சொசைட்டியில் மதிப்பு மிக்கவர். ராணி அவளது தோழி.



இப்போதைக்கு அது போதும். தேவைப்படும் போது மேலும் விவரிப்போம்.



---------------------------------------



கல்லூரி முதல்வர் வகுப்புக்குள் நுழைகிறார்.



மாணவர்கள் (கோரஸாக): குட்மார்னிங் சார்



முதல்வர்: குட்மார்னிங் டியர் ஸ்டூடண்ட்ஸ். XYZ பொறியியல் கல்லூரி உங்களை வரவேற்கிறது. நமது கல்லூரிக்குள் ராகிங் கிடையாது. யாராவது ராகிங் செய்தால் அலுவலகத்தில் புகார் செய்யலாம். இப்போது உங்கள் ஆசிரியர்கள் வருவார்கள். இன்று அறிமுகம் மட்டுமே. நாளை முதல் வகுப்புகள் தொடங்கும். THANK YOU (என்றபடி வெளியேறுகிறார்).



----------------------------------------------------

காட்சி : 3A
இடம்: அதே வகுப்பறை
பங்கேற்பாளர்கள் : மாணவர்கள் மற்றும் ஆசிரியர் 1

-----------------------------------------------------



மாணவர்கள் அறிமுகப்படுத்திக்கொள்கிறார்கள்.



----------------------------------------------------
காட்சி : 3B

இடம்: அதே வகுப்பறை

பங்கேற்பாளர்கள் : மாணவர்கள் மற்றும் ஆசிரியர் 2
-----------------------------------------------------

மாணவர்கள் அறிமுகப்படுத்திக்கொள்கிறார்கள்.



----------------------------------------------------
காட்சி : 3C

இடம்: அதே வகுப்பறை

பங்கேற்பாளர்கள் : மாணவர்கள் மற்றும் ஆசிரியர் 3
-----------------------------------------------------

மாணவர்கள் அறிமுகப்படுத்திக்கொள்கிறார்கள்.



3A, 3B மற்றும் 3C காட்சிகள் EDIT செய்து காட்டப்படுகிறது.





(தொடரும்)

-----------------------------------------------------------------------------------

தங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.

------------------------------------------------------------------------------------

4 comments:

Nathanjagk said...

என்ன இன்னும் காலேஜ் மயக்கம் தீரலியா?

குடிகாரன் said...

//ஜெகநாதன் said...
என்ன இன்னும் காலேஜ் மயக்கம் தீரலியா?//

அவ்வளவு சீக்கிரம் மறந்துடுவோமா?

நன்றி ஜெகநாதன்

Suresh Kumar said...

ஜெகநாதன் said...

என்ன இன்னும் காலேஜ் மயக்கம் தீரலியா?//////////////

காலேஜ் என்றாலே சுகமான அனுபவம் அப்படித்தான நண்பரே


இங்கேயும் அப்படி வந்து போங்க
http://www.sureshkumar.info/2009/07/blog-post_15.html

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்