Saturday, July 11, 2009

இதழோடு இதழாக - பாகம் 2

தொடர்கதையின் முதல் பாகம்

காட்சி: 2
இடம்: சிறைச்சாலை வளாகம்
பங்கேற்பாளர்கள்: மதியழகன், சிறைக்காவலர், கைதிகள் 4 பேர்
நேரம்: மாலை ஆறு மணி

சிறைக்காவலர்: நேரமாச்சு, எல்லாரும் செல்லுக்கு போங்க.

மதி: சார், இந்த புக்கை படிச்சு முடிச்சுட்டேன். அப்துல் கலாமோட 'அக்னிச்சிறகுகள்' புத்தகம் கிடைக்குமா?

சி.கா: ஜெயிலர் அய்யா வந்தவுடனே கேட்டுட்டு சொல்றேன். (என்றபடி மதி தந்த புத்தகத்தை வாங்கிக்கொண்டு நகர்கிறார்.)

கைதிகள் அனைவரும் செல்லுக்குள் செல்கிறார்கள். மதியும் செல்கிறான்.

----------------------------------------------------------
காட்சி: 2 A
இடம்: சிறை அறை
பங்கேற்பாளர்கள்: கைதிகள் 4 பேர், சிறைக்காவலர்

கைதி 1: அண்ணே, விஷயம் தெரியுமா?. மதியை ரிலீஸ் பண்ணப்போறாங்களாம்.

கைதி 2: அதுனாலே உனக்கு உன்ன பிரச்சனை?

கைதி 1: அதில்லண்ணே.

கைதி 2: என்னா நொதில்லண்ணே.

கைதி 1: அது வந்து...

கைதி 2: உனக்கு என்னடா ஆச்சு?

கைதி 3: அவன் கிடக்கிறான் விடுண்ணே.

கைதி 4: யாரிண்ணன் இந்த மதி?

கைதி 2: நீ புதுசுல்ல. அதான் தெரியல.

கைதி 4: நீங்க சொல்லுங்கண்ணே.

கைதி 2: எனக்கு அவனோட கேஸை பத்திதான் தெரியும். அவனைப்பத்தி தெரிஞ்சுக்கிட்டு நீ என்னா பண்ண போற?

கைதி 4: சும்மா தெரிங்சுக்கலாமுன்னுதான்...

கைதி 2: அவனோட பிரண்ட் பக்கத்து பிளாக்குலதான் இருக்கான். எது வேணும்னாலும் அவன்கிட்ட கேட்டுக்கோ.

கைதி 4: சரிண்ணே.

சி.கா: ஏய், என்னடா சத்தம்.

கைதி 1: சும்மா பேசிக்கிட்டிருந்தோம் சார்.

சி.கா: சும்மாவும் பேச வேண்டாம், சுமந்துகிட்டும் பேச வேண்டாம். படுத்து தூங்குங்கடா.

கைதி 1: சரி சார்.

காவலர் நகர்கிறார். கைதிகள் அனைவரும் படுத்துக்கொள்கிறார்கள்.

----------------------------------------------------------
காட்சி: 2 B
இடம்: சிறை அறை
பங்கேற்பாளர்கள்: சிறைக்காவலர், மதி

சி.கா: மதி, மதி

மதி: (படுக்கையிலிருந்து எழுந்தபடியே) சொல்லுங்க சார்

சி.கா: என்னப்பா, தூங்கிட்டியா?

மதி: இல்ல சார். சும்மா இப்போதான் படுத்தேன்.

சி.கா: அந்த புக்கு இப்போதைக்கு இல்லையாம். வேற ஏதாவது வேணுமான்னு ஜெயிலர் கேக்க சொன்னாரு.

மதி: இல்ல சார். கிடைக்கும் போது குடுத்தா போதும் சார்.

சி.கா: இன்னும் ஒரு வாரந்தான் இருப்பே இல்ல. வெளில போய் என்ன பண்ணுறதுன்னு ஏதாவது யோசிச்சு வச்சிருக்கியா?

மதி: இல்ல சார். வெளில போய் முதல்ல அனிதாவை பாக்கணும் சார்.

சி.கா: இப்போ அந்த பொண்ணு எங்கப்பா இருக்கு.

மதி: தெரியல சார். போன மாசம் லெட்டர் போட்டிருக்கேன். எப்படியும் பதில் வந்துரும் சார்.

சி.கா: சரிப்பா மதி. நான் கெளம்புறேன். நீ தூங்குப்பா.

மதி: சரி சார்.

மதி மெதுவாக கட்டிலில் அமர்கிறான். அப்படியே படுத்து மேலே ஓடிக்கொண்டிருக்கும் ஃபேனை உற்றுப்பார்க்கிறான்.

அப்படியே கொசுவர்த்தியை சுற்றி ஒரு ஃபிளாஷ் பேக்.


(தொடரும்)
-----------------------------------------------------------------------------------

தங்களது மேலான கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன. நன்றி.

------------------------------------------------------------------------------------

2 comments:

குசும்பன் said...

நன்றாக இருக்கிறது!

குடிகாரன் said...

//குசும்பன் said...
நன்றாக இருக்கிறது!//

நன்றி திரு.குசும்பன்